இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜ்குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அதன்பிறகு பல பிஸ்னஸ்களில் கால் பதித்து பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். முக்கியமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனராக இருப்பவர், யோகா பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றையும் திறம்பட நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் இணைந்து குரூப்கோ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். ஆண்களே செயல்பட்டு வரும் இந்த துறையில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று கூறும் ஷில்பா, மக்கள் மகிழச்சியாக வாழ தானும் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரியல் எஸ்டேட் கட்டுமான தொழிலில் கால் பாதித்துள்ளாராம. தங்களின தகுதிக்கேற்ப மக்கள் கேட்கும் கட்டிடங்களை செவ்வனே செய்து கொடுத்து அவர்கள் மனதில் இடம்பிடிப்பதே எனது முதல் நோக்கம் என்கிறார்.