சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை தொடர்பாக, அவர் சரண் அடைய மேலும் 4 வார கால அவகாசம் அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர், உயிரிழந்தனர். இந்த வழக்கில், சட்ட விரோதமாக, ஆயுதங்கள் வைத்திருந்ததாக, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனையை, ஐந்தாண்டு தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட், கடந்த மார்ச் 21-ம் தேதி உத்தரவிட்டது. "ஏற்கனவே, 18 மாதங்கள் சஞ்சய் சிறையிலிருந்துள்ளதால், மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக, வரும் 18ம் தேதிக்குள் (நாளை), கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என, சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தான் நிச்சயம் சரண் அடைவேன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பேட்டியளித்த சஞ்சய் கூறினார். அப்போது அவர் மிகவும் உணர்ச்சிகர வசமாக பேசி கண்ணீர் எல்லாம் விட்டார். இதனிடையே நாளைக்குள் சஞ்சய் தத் சரண் அடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வருவதாகவும், இதன் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், சரண் அடைவதற்கு, ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும், சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், சவ்கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இன்று(17.04.13) விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதிகள் மனிதாபிமான அடிப்படையில் சஞ்சய் தத்திற்கு மேலும் 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.