தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் கடன் பட்டிருக்கிறேன் என்று நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். நடிகர் அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன், அசின் ஆகியோரது நடிப்பில் வெளியாகி, சூப்பர்ஹிட்டான படம் போல்பச்சன். இந்நிலையில் தனியார் ஊடகம் சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில், போல்பச்சன் படத்தில் சிறப்பாக நடித்தற்காக அபிஷேக் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது.
விருதுபெற்ற மகிழ்ச்சியில் பேசிய நடிகர் அபிஷேக் பச்சன், போல்பச்சன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த டைரக்டர் ரோகித் ஷெட்டிக்கும், உடன் நடித்த அஜய் தேவ்கனுக்கும் என் நன்றி. இவர்களோடு எனது குடும்பத்தாருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் இன்றி இப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்குமா என்பது தெரியாது. இவர்கள் எல்லாத்தையும் விட எனது மனைவி ஐஸ்வர்யாவுக்கு நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன், அவரது அன்பு மற்றும் அவர் கொடுக்கும் ஆதரவு என்னை இன்னும் மேலே உயர்த்தும் என்று கூறியுள்ளார்.