டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மன அமைதிக்காக ஒரு வருடம் ஓய்வு எடுக்க போவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இப்போதும் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது பிரகாஷ் ஜா இயக்கி வரும் சத்யகிரஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பிளாக்கில், ஓராண்டு ஓய்வு எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். தனது பிளாக்கில் மேலும் அவர் கூறியிருப்பதாவது, மெல்போர்ன் நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எனது கடந்த கால சினிமா நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கவுரவம் அளிக்கப்பட இருக்கிறது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். தொடர்ந்து சத்யகிரஹா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிலும், அதனைத்தொடர்ந்து நியூயார்க்கில் தி கிரேட் கேட்ஸ்பை படத்தின் ப்ரீமியர் ஷோவிலும் பங்கேற்கிறேன். பிறகு ஓராண்டுக்கு ஓய்வு எடுக்க போகிறேன். என்னுள் இருக்கும் மன உளைச்சலை போக்கவும், மன அமைதிக்காவும் இந்த ஓய்வு அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.