பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சினிமா நடிகைகளைப்பொறுத்தவரை தங்களது வயதை ரொம்ப சீக்ரெட்டாகவே வைத்திருப்பார்கள். குறிப்பாக 19 வயதிலிருந்து 20 வயதை தொடவே அவர்களைப்பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகளாவது பிடிக்கும். அந்த அளவுக்கு வயதை குறைத்தே சொல்லி வருவார்கள். ஆனால் பாலிவுட் நடிகை வித்யாபாலன் அப்படியல்ல. இப்போது நான் 35 வயதை கடந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார். அதனால், இனிமேல் நான் காதல் செய்வது போன்ற நடிக்க மாட்டேன். நான் அப்படி நடித்தால் இப்போதைய ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். அதனால் இனி அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்லப்போகிறேன்.
அதாவது, சமீபத்தில் நான் நடித்து வெளியான தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படங்களில் நடித்தது போன்று மாறுபட்ட கதைகளில் நடிக்கப்போகிறேன். அதுபோன்ற மெச்சூரிட்டியான கதைகளில் நடிப்பதுதான் எனது மெச்சூரிட்டிக்கு மேட்சாக இருக்கும். மேலும், மேற்கண்ட இரண்டு படங்களுமே என்னை இந்திய அளவில் பேச வைத்தன. அதிலும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தேசிய விருதும் பெற்றுத்தந்தது. அதனால் இப்போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை விட விருதுகள் மீதுதான் எனது ஆர்வம் அதிகமாகி உள்ளது என்கிறார் வித்யாபாலன்.