'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரியங்கா சோப்ராவும், ரண்பீர் கபூரும், மாஜி காதலர்கள். சில ஆண்டுகளுக்கு முன், இருவரும், நெருக்கமாக காதலித்து வந்தனர். யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவர்களின் காதல், பிரேக் அப் ஆகி, இருவரும், பிரிந்து விட்டனர். ஒருவரை ஒருவர், நேரில் சந்தித்தால் கூட, முகம் கொடுத்து பேசுவது இல்லை.ஆனால், காலம், இப்படியே போய் விடுமா என்ன? "யே ஜவானி ஹை திவானி என்ற படத்தில், இருவரும், ஒன்றாக நடிக்கின்றனர். காதலில் பட்ட காயம், மனதில் இருந்தாலும், இருவரும், அதை வெளிக்காட்டாமல், படத்தில் நடித்து முடித்து விட்டனர். ஆனால், படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சி, சமீபத்தில் மும்பையில் நடந்தபோது, எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீடியாக்காரர்கள், படத்தை பற்றி கேட்பதை விட, பிரியங்கா - ரண்பீரின் கடந்த கால காதல் பற்றியே, கேள்விகளை கேட்டனர். ஒரு கட்டத்தில், கண்ணீர் விட்டு அழுது விட்டார், பிரியங்கா. அருகில் அமர்ந்திருந்த, மாஜி காதலர், ரண்பீர் தான், பிரியங்காவை தேற்றினாராம்.