ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் ஒரு நடன மாஸ்டராக அறிமுகமானவர் பிரபுதேவா. நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் என்கிற அடையாளத்தை வைத்துக்கொண்டு, சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது உள்பட சில பாடல்களுக்கு நடனமாடி குறுகிய காலத்தில் பரபரப்பானார் பிரபுதேவா. அதன்பிறகு ஹீரோவாகி பல வருடங்களாக நடித்து வந்தவர், போக்கிரி படத்துக்குப்பிறகு இயக்குனராகி, இப்போது பாலிவுட்டில் பெரிய இயக்குனராக கொடிநாட்டி வருகிறார்.
இந்த நிலையில், வில்லுவில் தனது இயக்கத்தில் நடித்த நயன்தாராவை காதலித்தார் பிரபுதேவா. அதன்காரணமாக, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்த மனைவியையே விவாகரத்து செய்தார். ஆனால் பின்னர் நயன்தாராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட, கடைசி நேரத்தில் அவரை கழட்டி விட்டார். அதன்பிறகு மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார். இப்படியாக, சினிமாவில் சாதித்து வரும் பிரபுதேவாவுக்கு குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட சோதனைகள்.
ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு ஜாக்குலைன் என்ற பாலிவுட் நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. இந்த ஜாக்குலைன், தற்போது பிரபுதேவா இயக்கி வரும் ராமைய்யா வாஸ்தவாய்யா என்ற இந்தி படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்கிறாராம். இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமாகியிருப்பதால், அடிக்கடி பார்ட்டிகளிலும் தலைகாட்டுகிறார்களாம். அதோடு, தான் அடுத்து இந்தியில் இயக்கும் படத்தின் ஹீரோயினும் ஜாக்குலைன் தான் என்று இப்போதே அறிவித்து விட்டாராம் பிரபுதேவா.