ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு கதையில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றவர் பாலிவுட் நடிகை வித்யாபாலன். அந்த படத்தில் நடித்தபோது அவருக்கு இருந்த எதிர்ப்பு, விருது அறிவிக்கப்பட்டபோது அடங்கிப்போனது. ஆனால் அதையடுத்து, கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானபோதும் அவர் அந்த வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தவில்லை அவர். என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவள் நான். அதனால் எந்த எதிர்ப்புகளுக்கும் தலைவணங்க மாட்டேன் என்று தில்லாக பதில் கொடுத்தார்.
இதுபற்றி வித்யாபாலன் மேலும் கூறுகையில், இப்போது எனக்கு 35 வயது ஆகி விட்டது. இத்தனை வயதுக்குப்பிறகு நான் வெறும் டூயட் மட்டுமே பாடிக்கொண்டிருந்தால், நடிப்பு போரடித்து விடும். அதனால் இனிமேற்கொண்டு வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்தால்தான் என் சீனியாரிட்டிக்கும் மரியாதை. என் வயசுக்கும் மரியாதை. அதனால்தான் ரூட்டை மாற்றி வருகிறேன். இது மட்டுமின்றி இன்னும் அரசியல்ரீதியாக எத்தனை அதிரடியான வேடங்கள் என்றாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் நெத்தியடியான அறிவிப்பு ஒன்றை பாலிவுட்டில் வெளியிட்டு தற்போது பரபரப்பு கூட்டியிருக்கிறார் வித்யாபாலன்.