டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராவணன், கடல் என தொடர்ந்து இரண்டு படங்கள் கொடுத்த தோல்வியால் அதிர்ந்து போய் இருக்கிறார் டைரக்டர் மணிரத்னம். இதனால் இப்போதைக்கு தமிழ் படங்களை இயக்கும் எண்ணத்தை கைவிட்டு, இந்தியில் படம் இயக்க முடிவெடுத்து இருக்கிறார். அவர் இயக்கும் படம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி எடுக்கப்பட இருப்பதாக ஏற்கனவே தகவலும் வெளியானது. இந்நிலையில் அந்தப்படம் ஏற்கனவே மணிரத்னம் இயக்குவதாக இருந்த லஜ்ஜோ படம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு அமீர்கான், கரீனா கபூரை வைத்து லஜ்ஜோ என்ற படத்தை எடுக்க முடிவுசெய்தார் மணிரத்னம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதை இது. இப்படத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் இருக்குமாம். அதோடு ஒரு அழகிய காதல் கதையையும் சொல்ல எண்ணியிருந்தார். ஆனால் சில பல பிரச்னைகளால் இப்படத்தை கைவிட்டார் மணி. இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த படத்தை எடுக்க எண்ணியிருக்கிறார். பிரபல பாலிவுட் எழுத்தாளர் ரென்சில் டி சில்வாவுடன் இணைந்து இப்படத்திற்கான கதையை ரெடி பண்ணி வருகிறார். அதேசமயம் ஏற்கனவே இப்படத்தில் கமிட்டான அமீர்-கரீனா ஜோடி மீண்டும் நடிப்பார்களா...? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடைசியாக மணிரத்னம் இயக்கிய இரண்டு படங்களும் சரியாக போகாததால் இருவரும் லஜ்ஜோவில் நடிக்க யோசிப்பதா கூறப்படுகிறது.