இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ், தெலுங்கு, இந்தி என, அனைத்து மொழிகளிலும், கலக்கிக் கொண்டிருக்கும் தமன்னா, முதல் முதலாக, "சாந்த் சா ரோஷன் சேரா என்ற இந்தி படத்தின் மூலம் தான், வெள்ளித் திரைக்கு அறிமுகமானார்.அதற்கு பின், இந்தி திரையுலகம், அவரை கண்டு கொள்ளவில்லை. ஆனாலும், கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும், தமன்னாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். இந்த இரண்டு மொழிகளிலும், உச்சத்தில் இருக்கும்போதே, "ஹிம்மத்வாலா என்ற படத்தின் மூலம், மீண்டும் இந்திக்கு அடி எடுத்து வைத்தார், தமன்னா.முதலில் விட்ட வாய்ப்பை, இப்போது பிடித்து விடலாம் என்பது, அவரது திட்டம். இதனால், சென்னை, ஐதராபாத் நகரங்களுக்கு மூட்டை கட்டி விட்டு, மும்பையிலேயே நிரந்தரமாக குடியேறி, வாய்ப்புகள் தேடி வந்தார்.தற்போது அவர் நினைத்தது நடந்துள்ளது.
அக்ஷய் குமார் ஜோடியாக, புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், தமன்னா. புதுமுகம் ஒருவர் இயக்கும் இந்த படத்தில், தமன்னாவுக்கு, செமத்தியான கேரக்டராம். "இனிமேல், இந்தியில், நான் எடுத்து வைக்கும், ஒவ்வொரு அடியும், வெற்றிப் படியாகவே இருக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளார், தமன்னா.