கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
முருகதாஸ் இந்தியில் இயக்கி வரும் துப்பாக்கி படத்தின் ஹீரோ அக்ஷ்ய் குமாருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய்-காஜல் அகர்வால் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான படம் துப்பாக்கி. இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, 100நாட்களையும் கடந்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய், முருகதாஸ் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமும் இது தான்.
இந்நிலையில் தமிழில் ஹிட்டடித்த துப்பாக்கியை இந்தியில் ரீ-மேக் செய்து வருகிறார் முருகதாஸ். இதில் ஹீரோவாக அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே முருகதாஸ்க்கு இந்தியில் நல்ல பெயர் இருப்பதாலும், அக்ஷ்ய் குமாரின் சமீபத்திய படங்கள் அனைத்தும் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்து இருப்பதாலும் இந்தப்படத்திற்கு அவருக்கு இதுவரை வழங்கப்படாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது எவ்வளவு சம்பளம் என்று விசாரித்து பார்த்ததில் சுமார் ரூ.50 கோடியாம். தமிழ் துப்பாக்கி படத்தின் மொத்த பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் சம்பளம் இந்தி துப்பாக்கிக்காக அக்ஷ்ய் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அக்ஷ்ய் குமாருக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா என்று முருகதாஸிடம் கேட்டால் அவரது சம்பளம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார் முருகதாஸ்.