ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டுக்கு போனதிலிருந்து, இலியானா ரொம்பத் தான், மாறி விட்டார். "மனம் என்ற தலைப்பில், நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்டோர் நடிக்கவுள்ள படத்தில், ஹீரோயினாக நடிப்பதற்கு, அவரிடம் கால்ஷீட் கேட்டுச் சென்றுள்ளார், படத்தின் தயாரிப்பாளர். இலியானாவோ, "இப்போது, தெலுங்கு படத்தில் நான் நடிப்பது இல்லையே. பாலிவுட்டில் தான், கவனம் செலுத்துகிறேன் என, கூறியுள்ளார். தயாரிப்பாளரோ, "இந்த படத்தின் கதை, ரொம்ப வித்தியாசமானது. இதில் நீங்கள் நடித்தால், நல்ல பெயர் கிடைக்கும் என, கெஞ்சியுள்ளார். ஆனால், படத்தின் கதை பற்றி எல்லாம், கவலைப்படாத இலியானா, கறாராக, "நோ சொல்லி விட்டாராம்.கடைசி நேரத்தில், தயாரிப்பாளர், இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறியதும், "அப்படியா. அப்ப நடிக்கிறேன் என, உடனே, கால்ஷீட் கொடுத்தாராம். இலியானாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம், தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோயின்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.