வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் பழம்பெரும் கவர்ச்சி நடிகை, ஜீனத் அமன், 61, தன்னை விட, 25 வயது குறைந்த, மகன் வயதில் உள்ள தொழிலதிபரை, திருமணம் செய்ய உள்ளார். இந்த பொருந்தா திருமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியவர்களிடம், ""காதலுக்கு வயது கிடையாது. காதலித்து பாருங்கள்; உங்களுக்கும் அந்த உண்மை தெரியும், என்கிறார்.
பாலிவுட் படவுலகை, கிறங்கடிக்கும் தன் அழகால் கட்டி போட்டவர், ஜீனத் அமன். 1970ம் ஆண்டுகள் துவங்கி, 90ம் ஆண்டுகள் வரை, பாலிவுட் படங்களில், மிகக் குறைந்த ஆடைகளுடன், அவர் ஆடிய கவர்ச்சி நடனங்களுக்கும், அவர் கண் அசைவிற்கும், உடல் நளினத்திற்கும் அடிமையான ரசிகர்கள் ஏராளம்.கோடிக்கணக்கில் பணம் சேர்ந்தாலும், நல்ல வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. அவரை மணக்கவும், துணையாக சேர்த்துக் கொள்ளவும், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் போன்ற நடிகர்களும், மிகப் பெரிய தொழிலதிபர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் போன்றவர்களும் முன்வந்தனர் என, இப்போதும் சொல்லப்படுகிறது. எனினும், மசார் கான் என்ற, சில படங்களில் மட்டும் தலைகாட்டியவரை, 1985ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை நிம்மதியாக இல்லை. திடீரென ஒரு நாள், பத்திரிகையாளர்களை அழைத்து, மசார் கானுடனான தன் திருமண வாழ்க்கை முறிந்து விட்டதாக அறிவித்து, முறைப்படி விவாகரத்தும் பெற்று விட்டார்.
ஓட்டலில், பாலிவுட் நடிகர் சஞ்சய் கானுடன் ஏற்பட்ட தகராறில், சஞ்சய் கான் தாக்கியதில், ஒரு கண் பார்வையை இழந்த ஜீனத் அமன், தன் இரு மகன்கள், அசான், 26, மற்றும் ஜகான், 23, ஆகியோருடன், மும்பையில் வாழ்ந்து வருகிறார். கடந்த, 2011ம் ஆண்டு, புனே நகரில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற ஜீனத், தற்செயலாக, 36 வயது தொழிலதிபரை சந்தித்தார். பார்த்த உடனேயே, இரு மனங்களும் இணைந்தன. அந்த சந்திப்பு தான், இப்போது திருமணம் வரை சென்றுள்ளது. தாயின் புரட்சிகர திருமணத்திற்கு, மகன்கள் இருவரும், பூரண ஆசி வழங்கியுள்ளனர். தங்கள் வயதை விட, 10 வயது தான், தங்கள் தந்தைக்கு அதிகம் என்ற போதிலும், தாய் ஜீனத் சந்தோஷமாக இருந்தால் போதும் என்கின்றனர், இரு மகன்களும்.
"இந்த வயதில் காதலா... என, ஜீனத் அமனிடம் நிருபர் ஒருவர் கேட்க, ""காதலுக்கு வயது கிடையாது. மனம் தொடர்பானது அது. உடலுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. எந்த வயதிலும் காதல் வரும். நீங்களும் காதலித்து பாருங்கள்; உண்மை தெரிய வரும், என்றார். எனினும், தன் இளம் காதலர் பற்றியோ, திருமணம் எப்போது என்பது குறித்தோ, அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையே, ஜீனத் அமனை சந்தித்த சில செய்தியாளர்களிடம் பேசிய அவர், ""நான் காதலிப்பது உண்மை தான். திருமணம் செய்யும் எண்ணமில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன். எந்த முடிவும் நான் இன்னும் எடுக்கவில்லை, என்று கூறினார்.