'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டில்லியில் நடைபெற்ற காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்தாக சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் இந்த முறைகேட்டில் காங்கிரஸ் எம்.பி.யான சுரேஷ் கல்மாடிக்கு தொடர்பு இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து, சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சுரேஷ் கல்மாடி மற்றும் மத்திய விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் உறுப்பினர்கள் சிலரின் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுரேஷ் கல்மாடியின் கடைசிநேர விருப்பத்தின்படி, காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இதற்காக அரசுப் பணத்திலிருந்து ரூ.71.73 லட்சம் ஷில்பா ஷெட்டிக்கு வழங்கப்பட்டதாகவும் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஷில்பாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.