'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜஸ்தான் அரசியலை கலக்கிய பன்வாரி தேவி கதையில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு மர்ம ஆசாமிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த படத்தின் டைரக்டருக்கும் இதேபோன்று மிரட்டல்கள் வந்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி (36). நர்சாக பணிபுரிந்த இவருக்கு அம்மாநில மந்திரியாக இருந்த மகிபால் மாதர்னா உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. மகிபால் மாதர்னா மற்றும் சிலருடன் பன்வாரி தேவி உல்லாசமாக இருந்த சி.டி. வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் ஜோத்பூரில் இருந்து திடீரென காணாமல் போன பன்வாரி தேவி, கடந்த 2011–ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற பெயரில் இந்திப்படம் எடுக்கப்படுகிறது. டைரக்டர் கே.சி.பொக்காடியா இயக்கி வரும் இப்படத்தில், நடிகை மல்லிகா ஷெராவத் கதாநாயகியாக நடிக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மல்லிகா ஷெராவத்துக்கும், டைரக்டர் கே.சி.பொக்காடியாவுக்கும் போனில் மிரட்டல்கள் வந்துள்ளன. இதுபற்றி மல்லிகா ஷெராவத் அளித்துள்ள பேட்டியில், ‘என்னுடைய சகோதரருக்கு ஒரு மர்ம போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், பன்வாரி தேவி கதையை வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிப்பதில் இருந்து உன்னுடைய சகோதரியை விலகுமாறு சொல் என்று மிரட்டி இருக்கிறார். எனக்கும் இதே மாதிரியான மிரட்டல்கள் வந்துள்ளது, என்று கூறியுள்ளார்.