ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி, ஆஷா போஸ்லே, முதல் முறையாக, இந்த படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமாகிறார். நாட்டில் உள்ள, ஒவ்வொரு குடும்பங்களிலு<ம் நடக்கும், சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, இந்த படம்.படத்தின் கதை குறித்து, இயக்குனர் மகேஷ் கொடியால் கூறுகையில்,"வயதான பெண்மணி ஒருவருக்கும், அவரது நான்கு பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும், உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் தான், படத்தின் கதை. நான்கு பிள்ளைகளில், மூன்று பிள்ளைகள், தங்கள் தாயாரை கைவிட்ட நிலையில், மூத்த மகள் மட்டும், அவரை அரவணைக்கிறார். இதற்கு, அவரது கணவரும், மகளும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்கு, கடும் முயற்சிகளை, அவர் மேற்கொள்கிறார். இதைத் தான், அனைவரும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளோம் என்கிறார்.