டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் இயக்குனர், சுபாஷ் காய், வெள்ளித் திரைக்கு, புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில், பிரபலமானவர். இவர் அறிமுகப்படுத்திய, மனிஷா கொய்ராலா, மஹிமா சவுத்ரி போன்றவர்கள், பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். இதனால், இவர், ஒரு படம் எடுத்தாலே, அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் என,தெரிந்து கொள்வதில், பாலிவுட்டே
பரபரக்கும். சுபாஷ் காய், தற்போது,"கான்சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிப்பதற்கு, பொருத்தமான நடிகையை தேடி வந்தார். கடும் போராட்டத்துக்கு பின், கோல்கட்டாவை சேர்ந்த ஒரு ரசகுல்லாவை, அவர் தேர்வு செய்துள்ளார். அந்த ரசகுல்லாவின் பெயர், மிஸ்தி. இவரின் புகைப்படம், சமீபத்தில் மீடியாக்களில் வெளியாகியது.
இதுகுறித்து, சுபாஷ் காய் கூறுகையில், " இந்த படத்தில் நடிப்பதற்கு, 350 பெண்களுக்கு மேக்அப் போட்டு, டெஸ்ட் எடுத்தேன்.
யாருமே, திருப்தியாக இல்லை. இறுதியாக, இந்த பெண்ணை தேர்வு செய்தேன். இந்த பெண்ணின் முகம், எனக்கு மிகவும்
திருப்தியாக இருந்தது என்றார்.