ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான்கான் நடத்தி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் சனாகான் கலந்து கொண்ட போட்டியின்போது பாலிவுட் நடிகரான ராஜீவ் பாலுவும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர்களுக்கிடையே மிக நெருக்கான நட்பு ஏற்பட்டதாகவும், அதனால் தனது மனைவி டெல்நாஸ் ராணியை மறந்து விட்டு, சனாகானுடனேயே ராஜீவ் பாலு குடியும் குடித்தனமுமாகி விட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் கடும் புகை கிளம்பிக்கொணடிருக்கிறது. ஆனால் சில மாதங்களாக இந்த சர்ச்சை குறித்து எந்த பதிலும் சொல்லாமல் வாயை இறுக மூடிக்கொண்டிருந்த சனாகான் தற்போது தான் நிராபராதி, ராஜீவுக்கும் எனக்குமிடையே எந்தவித தவறான கனெக்சனும் கிடையாது என்று வாய்மொழி வழங்கி வருகிறார்.
அதோடு, இந்த நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அவரும் நானும் பழகியிருக்கிறோம். ஆனால் ஒருநாள்கூட எங்களது பார்வையில் தவறான நோக்கம் கசிந்ததில்லை. அப்படியிருந்தும் இப்படி செய்தி பரவியிருப்பது யாரோ உள்நோக்கத்துடன் இந்த செய்தியை பரப்பியிருப்பது தெரிகிறது. ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை. இப்போதும் ராஜீவுடன் பழகித்தான் வருகிறேன். என் மனதில் தவறான அபிப்ராயம் இல்லாதபோது எதற்காக யூகங்களைக்கண்டு நான் பயப்பட வேண்டும் என்றும் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார் சனாகான்.