விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
பிரபல இந்தி நடிகை பூஜா பட்டுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகை பூஜா பட். இவருக்கு மர்மநபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பூஜாபட் கூறும் போது என் செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாக என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டி தீர்த்த பிறகு போனை துண்டித்து விட்டான். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி இருந்தது. உடனடியாக இது குறித்து போலீசில் புகார் செய்தேன் என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25வயதுடைய வாலிபர் என்றும், அவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதனை பூஜா பட்டும் உறுதி செய்துள்ளார்.