600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
இந்தியில், கடந்தாண்டு வெளியாகி, பரபரப்பாக ஓடியதோடு, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற படம், பர்பி. இதில், ரன்பீர் கபூர், காது கேளாதவராகவும், வாய் பேசாதவராகவும் நடித்திருந்தார். பிரியங்கா சோப்ரா, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக, இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில், "பர்பியும் பங்கேற்றது. இதனால், பிரியங்கா சோப்ரா, உற்சாகத்தில் இருந்தார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்பதற்காக, ஒன்பது படங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில், பர்பி இடம் பெறவில்லை. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து, சோகத்தில் ஆழ்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில்," விருது கிடைக்காதது சோகமாகத் தான் இருக்கிறது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், நான் நடித்த படமும், பங்கேற்றது என்பதே, எனக்கு பெருமையான விஷயம் தானே என, தனக்கு தானே, ஆறுதல் கூறிக் கொள்கிறார்.