பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தியில், கடந்தாண்டு வெளியாகி, பரபரப்பாக ஓடியதோடு, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற படம், பர்பி. இதில், ரன்பீர் கபூர், காது கேளாதவராகவும், வாய் பேசாதவராகவும் நடித்திருந்தார். பிரியங்கா சோப்ரா, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக, இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில், "பர்பியும் பங்கேற்றது. இதனால், பிரியங்கா சோப்ரா, உற்சாகத்தில் இருந்தார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்பதற்காக, ஒன்பது படங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில், பர்பி இடம் பெறவில்லை. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து, சோகத்தில் ஆழ்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில்," விருது கிடைக்காதது சோகமாகத் தான் இருக்கிறது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், நான் நடித்த படமும், பங்கேற்றது என்பதே, எனக்கு பெருமையான விஷயம் தானே என, தனக்கு தானே, ஆறுதல் கூறிக் கொள்கிறார்.