சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
இந்தியில், கடந்தாண்டு வெளியாகி, பரபரப்பாக ஓடியதோடு, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற படம், பர்பி. இதில், ரன்பீர் கபூர், காது கேளாதவராகவும், வாய் பேசாதவராகவும் நடித்திருந்தார். பிரியங்கா சோப்ரா, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக, இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில், "பர்பியும் பங்கேற்றது. இதனால், பிரியங்கா சோப்ரா, உற்சாகத்தில் இருந்தார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்பதற்காக, ஒன்பது படங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில், பர்பி இடம் பெறவில்லை. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து, சோகத்தில் ஆழ்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில்," விருது கிடைக்காதது சோகமாகத் தான் இருக்கிறது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், நான் நடித்த படமும், பங்கேற்றது என்பதே, எனக்கு பெருமையான விஷயம் தானே என, தனக்கு தானே, ஆறுதல் கூறிக் கொள்கிறார்.