இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியில், கடந்தாண்டு வெளியாகி, பரபரப்பாக ஓடியதோடு, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற படம், பர்பி. இதில், ரன்பீர் கபூர், காது கேளாதவராகவும், வாய் பேசாதவராகவும் நடித்திருந்தார். பிரியங்கா சோப்ரா, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக, இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில், "பர்பியும் பங்கேற்றது. இதனால், பிரியங்கா சோப்ரா, உற்சாகத்தில் இருந்தார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்பதற்காக, ஒன்பது படங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில், பர்பி இடம் பெறவில்லை. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து, சோகத்தில் ஆழ்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில்," விருது கிடைக்காதது சோகமாகத் தான் இருக்கிறது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், நான் நடித்த படமும், பங்கேற்றது என்பதே, எனக்கு பெருமையான விஷயம் தானே என, தனக்கு தானே, ஆறுதல் கூறிக் கொள்கிறார்.