'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தன் திரையுலக வாழ்க்கை பற்றியும், தன்னைப் பற்றியும், சமீபத்தில், மீடியாக்களுக்கு, மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என் தோற்றத்தை பார்க்கும்போது, சாப்ட்டான பொண்ணு மாதிரித் தான், இருக்கும். ஆனால், உண்மையில், நான், கொஞ்சம், கரடு முரடான ஆளு. சுருக்கமாக கூறினால், ஒரு சில விஷயங்களில், என் பேச்சை, நானே கேட்க மாட்டேன். முடிவெடுத்தால், முடிவெடுத்தது தான் என, சிரித்த தீபிகா,"என்னுடைய வேலையிலும், அத்தனை சீக்கிரமாக திருப்தி அடைந்து விட மாட்டேன். படப் பிடிப்பின்போது, டைரக்டரே, ஓ.கே., கூறினாலும், எனக்கு திருப்தி ஏற்படும் வரை, "சார், ஒன்மோர் டேக் போகலாம் என, கேட்டு வாங்குவேன்.
பல பெரிய நடிகர்கள், என் நடிப்பை பாராட்டினர். என்னை பொறுத்தவரை, ரசிகர்களின் பாராட்டைத் தான், விலை மதிப்பில்லாததாக கருதுகிறேன். ரசிகர்களின் கைதட்டல்கள், விசில்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இந்த உலகில், வேறு எந்த மகிழ்ச்சியும் இல்லை என, உணர்ச்சிவசப் படுகிறார், தீபிகா.