'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
உண்மை சம்பவங்களை சினிமாவாக்கும் முயற்சி காலங்காலமாக இந்திய சினிமாவில் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் டில்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சினிமா எடுக்கப்பட உள்ளது. டில்லி மாபியா என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் டைரக்டர் ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். டில்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கற்பழிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையுடன் டில்லியில், மாணவ – மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் திரைப்படம் ஆகிறது. மும்பை 125 கிலோ மீட்டர் என்ற இந்தி படத்தை இயக்கிய ஹேமந்த் மதுகர், இந்த படத்தை இயக்க முன்வந்து இருக்கிறார். இந்த படத்துக்கு அவர், டெல்லி மாபியா என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இது, மிகவும் வெட்ககேடான சம்பவம். டில்லியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டில்லியில் நம் சகோதரிகளும், மகள்களும் தினமும் படும் கஷ்டங்களையும், சிரமங்களையும் படத்தில் காட்டப் போகிறேன். கற்பழிப்பு சம்பவத்தில் நடந்த உண்மைகளை அப்படியே சொல்லப் போகிறேன். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன. அதையும் படத்தில் காட்ட இருக்கிறேன். படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள். எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும், என்று கூறியுள்ளார்.