பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
வழக்கமான, போலீஸ்-வில்லன் துரத்தல் கதை தான், இதுவும். ஆனாலும், "இதற்கு முன், எந்த படத்திலும், பார்க்காத அளவுக்கு, விறு விறுப்பான காட்சிகளும், பரபரப்பான திருப்பங்களும், இந்த படத்தில் இருக்கும் என, பயங்கரமான, "பில்டப் கொடுக்கின்றனர், படக் குழுவினர். மும்பையில், உள்ள டிஸ்கோ கிளப் உரிமையாளர்களின், சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்த, ஒரு போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார். அதில், படு பயங்கரமான பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இது தான், படத்தின் ஒன்லைன். சச்சின் ஜோஷி, கிகானா கான், ஆதித்ய பஞ்சோலி போன்ற, இந்தி பிரபலங்களுடன், நம்ம ஊர், பிரகாஷ் ராஜ், விமலா ராமன் ஆகியோரும், இந்த படத்தில் உள்ளனர். அங்குஷ் பட், படத்தை இயக்கியுள்ளார். அவர் கூறுகையில்,"நாட்டின், மற்ற நகரங்களிலிருந்து, மும்பை, சற்று வித்தியாசமானது. இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு அபாயத்துக்குள் சிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பின்னணியை பற்றித் தான், படத்தில் கூறியுள்ளோம் என்கிறார்.