ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒற்றன் படத்தில் "சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா" என்ற பாடலில் கட்டிடத் தொழிலாளர்களின் காமத்தை சொன்ன இளங்கண்ணன் இப்போது அதே கட்டிடத் தொழிலாளர்களின் கஷ்டத்தை சொல்ல ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் "அடித்தளம்". அங்காடித்தெரு மகேஷ்தான் ஹீரோ. ஆருஷி ஹீரோயின். "இந்த உலகத்துலேயே அதிக உடல் உழைப்பை கொடுப்பவன் கட்டிடத் தொழிலாளிதான். ஒரு வீட்டின் ஒவ்வொரு செங்கலையும் பார்த்து பார்த்து கட்டியவன். அதை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு கண்ணீரோடு செல்லும் அந்த வலியை ஆண்டு தோறும் சந்திக்கிறான். கட்டிடத் தொழிலாளர்களைச் -சுரண்டி ஒரு கூட்டமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை அப்படியே பதிவு செய்கிறேன்" என்கிறார் இளங்கண்ணன்.
கட்டுறது சின்ன வீடுங்களா... பெரிய வீடுங்களா...!!