தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வணக்கம்.
சக மனிதர் ஒருவருக்கு, விரும்பத்தகாத செயலொன்று நடக்கும் போது, வேடிக்கை பார்க்க நினைக்காத கிராமத்தான் ஒருவனின் மன வருத்தத்துடன், இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். நூற்றாண்டு கடந்துவிட்ட தமிழ் சினிமாவுக்கு என்று, சில மலிவான 'சென்டிமென்டு'கள் உண்டு. குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் ஒருவர் ஜெயித்து விட்டால், அவருக்காக தொடர்ந்து, அதே போன்ற கதாபாத்திரங்களையே கொடுத்து, அவர்களை ஓரங்கட்டி விடுவதும் அதில் ஒன்று.
ஒரு ரசிகனாக, அப்படி ஒரு துரதிருஷ்டமான, 'சென்டிமென்ட்' வளையத்திற்குள், நீங்களும் சிக்கிக் கொண்டீர்களோ என்று அஞ்சுகிறேன். இன்று, கொஞ்சம் வசதியும், திறமையும் இருந்தால் போதும்... யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நிலை, புற்றீசல் போல பெருகி விட்டது. ஆனால், தொடர்ந்த தேடலும், வலியை உணரும் மனதும் இருப்பவர்களுக்கு மட்டுமே, பாத்திரத்தை உள்வாங்கி, அதற்கு உயிர் கொடுக்கும் வித்தை, வசமாகிறது. அப்படியொரு வித்தை, ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக சுப்பிரமணியபுரத்திற்குள் வலம் வந்த, 'கனகு'விடம் இருந்தது. பின், கல்வியின் கோர முகத்தை தோலுரிக்க, தயாளனாக சாட்டை துாக்கி, நீங்கள் மாட்டிய போராளி சட்டை, அப்போது உங்களுக்கு சரியாக பொருந்தியது. அதற்காக, அந்த 'அட்வைஸ்' சட்டையை இன்னும் கழற்றாமல், கஞ்சி போட்டது போல விறைத்துக்கொண்டே திரிவது, தொடர்ந்து உங்களை ரசிப்பதை தடை செய்கிறது.
காமராஜரின் மறைவுக்குப் பின், காவல் துறை அதிகாரியாக, அவர் வீட்டை சோதனைப் போடும் போது, சோகம் என நினைத்து நீங்கள் காட்டிய விறைத்த முக பாவங்கள், உங்களின் வசனங்களை விட, என்னை அதிகமாக ஆதங்கப்பட வைத்தது. அதிலிருந்து, தமிழ் சினிமாவின் காக்கிச் சட்டை கதாபாத்திரங்களுக்காக மட்டும், உங்களை நேர்ந்து விட்டுவிட்டார்களோ என்ற வருத்தத்தை, என்னால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒரு இயக்குனராக, வித்தியாசமான கதைக் களத்தில் ஜொலிக்கும் நீங்கள், நடிகனாக மட்டும், ஏன் ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளுகிறீர்கள்?
உங்களுக்காக ஒரு வியாபார சந்தையை உருவாக்கியிருக்கும் ரசிகர்களை, இனிமேலும் ஏமாற்றாமல், கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சி செய்யுங்கள்!