ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அநேக கோடி ஆசிர்வாதங்கள். புகுந்த வீட்டிலிருந்து, நீண்ட நாட்களுக்குப் பின், தன் தாய் வீட்டிற்கு வந்திருக்கும் மகளைப் பார்த்த ஒரு அம்மாவின் பரவசத்தோடு, இந்த கடிதத்தை எழுதுகிறேன். முன்னை விட, இன்னும் கொஞ்சம் அழகாகி இருக்கிறாய்; ஆனாலும், கொஞ்சம் இளைத்து விட்டாய்.
தாய்மை தரும் பக்குவத்திற்குப் பின், பிறந்த வீட்டிற்கு வந்து, அம்மாவின் கைபிடிக்கும் மகளின் முதல் தொடுதலில், சொல்லப்படாத ஓராயிரம் கதைகள் இருக்கும். அப்படி ஒரு கதையை, உன் '36 வயதினிலே'யில் நீ சொல்லி இருக்கிறாய்! இதுவரை,
ஆண்களின் எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் மட்டுமே வடிகாலாக இருந்து வந்த தமிழ் சினிமாவில்,
பெண்களின் வடுக்களுக்கும், வலிகளுக்கும், 'வசந்தி' உருவில், முழுமையாய் வடிவம் தந்திருக்கிறாய். 'அந்த வீட்டுல, நான் இதுவரைக்கும் என்னவாக இருந்தேன்' கலங்கியபடி கேட்கும் உன் கேள்வி, முந்தைய தலைமுறை கேட்க மறுத்தது; இன்றைய தலைமுறை, தவறாமல் கேட்க வேண்டியது!
'உனக்காகதான்டி என் கனவை தொலைச்சிட்டேன்' என, உன் மகளிடம் நீ உருகும் போது, பெற்ற மகள்களிடம், தலைமுறை இடைவெளியில் சிக்கித் தவிக்கும் அம்மாக்களின் அசல் பிரதிநிதியாகி, அசத்தி விட்டாய்; என்னையும் அழ வைத்து விட்டாய்! கணவன் மனமறிந்து பேசிப் பேசியே, தங்களின் விருப்பங்களை தொலைத்து விட்ட பெண்களின், அழுத்தமான சாட்சியம்மா உன் உருவில் வாழ்ந்த வசந்தி!
அம்மாடி... பெண்களின் வலிகளை பகிர்ந்து கொள்ள, இந்த ஒரு கடிதம் போதாது மகளே. காரணம், பெண்கள் அனுபவித்து வரும் வலியின், வெறும் ஒருதுளி நிஜம் தான்... வசந்தி!
அன்பு மகளே... இனி, வருடா வருடம் இல்லாவிட்டாலும், எப்போதாவது, வசந்தி போல
தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கு நீ வர வேண்டும். வருவாய் என்ற நம்பிக்கையுடன், 'வாடி ராசாத்தி...'
என, வாய் நிறைய உன்னை வரவேற்க காத்திருக்கும்...