ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னாள் 'நகைச்சுவை ஞானி'க்கு வணக்கம்,
சொந்த ஊருக்கு செல்ல முடியாத இவ்வருட சோகப் பொங்கலை, உங்களின் 'ஆம்பள' படம் பார்த்து சந்தோஷமாக்கி கொள்ளலாம் என்று நம்பிப் போனேன். ஆனால்... பெரும் நட்சத்திர படையோடு நீங்கள் கிண்டியிருக்கும் 'ஆம்பள' பொங்கல், எனக்கென்னவோ 'அல்வா' பொங்கலாகத்தான் இருந்தது.
அன்று, 'உள்ளத்தை அள்ளித் தந்து' நவரச நாயகனின் மறுவரவுக்கு நகைச்சுவைத் தோரணம் கட்டினீர்கள். 'வின்னரான' வடிவேலுவின் வெற்றிப் பயணத்தில் வந்த 'கிரி' வலத்தில், தங்களுக்கும் பங்குண்டு. தமிழ்நாட்டின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர், தங்களின் தோல்வியைக்கூட 'அது போன மாசம்' என, வேடிக்கையாக எதிர் கொண்டது உங்கள் நகைச்சுவையின் வெற்றி. ஒரு பழைய ஹோட்டலையும், கும்பகோணத்து தெருக்களையும் கொண்டு 'கலகலப்பூட்ட' முடிந்தது உங்களால்! சமீபத்தில், சிரிப்பு பேய்களால் 'அரண்மனை' கட்டி சாதித்தீர்கள்! 'அன்பே சிவம்' எனும், அத்தனை கனமான கதையில், கமல்ஹாசனையும் தாண்டி, மாதவன் தனித்து தெரிந்ததற்கு உங்கள் இயக்கம், ஒரு முக்கிய காரணம். இப்படியெல்லாம் சாதித்த நீங்கள், சந்தானம் தேய்த்த பழைய வசனங்களையும், அரைவேக்காட்டுத்தனமான போலீஸ் காட்சிகளையும், விஷாலின் தட்டையான வசன மொழியையும் 'நகைச்சுவை' என, எப்படி தந்தீர்கள்? அர்த்தமே இல்லாத தேர்தல் காட்சிகளும், யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு நீங்கள் யோசித்த 'அந்தர் பல்டி' கதாபாத்திரங்களும் உண்டாக்கிய தலைவலியை, உடனடி நிவாரணிகளால் கூட சரி செய்ய முடியவில்லை தெரியுமா?
'நம்ம படத்துல பெருசா என்ன கதை இருக்கப் போகுது; நம்மளை நம்பி வர்றவங்க, நல்லா சிரிச்சுட்டுப் போகணும்!'ன்னு ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்க! அது உங்க நம்பிக்கையை சொல்லுச்சு. இப்போ, ஹன்சிகாவையும், பூனம் பஜ்வாவையும் நம்புற அளவுக்கு, கற்பனை வறட்சி வந்துடுச்சா சுந்தர் சி?
இப்படிக்கு, உங்கள் ரசிகன்.