தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கே.வி.ஆனந்த் இயக்கிய கனாக் கண்டேன், அயன், கோ படங்களின் கதை வசனகர்த்தாக்களாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சுபா. கதை விவாதம், திரைக்கதை அமைப்பு என அனைத்திலும் கே.வி.ஆனந்த்க்கு உதவி வந்தார்கள். ஆனால் இவர்கள் இணைந்து பணியாற்றிய மாற்றான் படம் தோல்வி அடைந்து விட்டது. இதற்கு எழுத்தாளர்களின் தவறான ஆலோசனைதான் என்று கே.வி.ஆனந்த் கருதுகிறாராம். இதனால் ஏழுத்தாளர் சுபாவை தன் குழுவிலிருந்து விலக்கி விட்டாராம். தற்போது கே.வி.ஆனந்த்க்காக ரஜினிக்காக ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறாராம். இதன் கதை விவாதத்திலும், ஆலோசனையிலும் சுபா இல்லை. அவர்களுக்கு பதிலாக அந்த டீமில் இப்போது பட்டுக்கோட்டை பிரபாகர் காணப்படுகிறார். "ரஜினிக்காக தயாராகி வரும் ஸ்கிரிப்ட் சூப்பர் போலீஸ் ஆக்ஷன் ஸ்டோரி. உலகையே உலுக்கும் ஒரு க்ரைம் சென்னையில் நடக்கிறது. அதை கண்டுபிடிக்க வரும் இண்டர்போல் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடிக்கிறார். அதனால்தான் க்ரைம் நாவல்களுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டை பிரபாகரை இயக்குனர் விவாதத்திற்கு அழைத்துள்ளார். மற்றபடி சுபா எங்கள் அணியில்தான் இருக்கிறார்" என்கிறார்கள். கே.வி.ஆனந்தின் நண்பர்கள்.