இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நளனும் நந்தினியும் படத்திற்காக பாவாடை தாவணியில் மதுரையை சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார் அட்டக்கத்தி நந்திதா. மதுரை அவுட்டோரில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவில் "கும்முன்னு வருது... நம்ம ஊரு தேரு... தேருமேல வருகிற தேவதைய பாரு..." என்ற பாடலுக்கு ஹீரோ மைக்கேலுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவரைப் பிடித்து "என்னங்க தமிழ்நாட்டு பொண்ணாவே மாறிட்டீங்க போல..." என்றால் தெத்துப்பல் தெரிய கலகலவென சிரிக்கிறார்.
"பெங்களூருக்கும் சென்னைக்கும் 8 மணிநேர டிராவல்தான். தமிழ் நல்லா பேசுவேன். பாவாடை தாவணி அம்சா ஷூட்டாகுது. அப்போ நான் தமிழ் பொண்ணுதானே. அட்டகத்தியில என்னை அழகுபடுத்தி பார்த்தீங்க. இப்போ நந்தினியா பார்க்கப்போறீங்க. மார்டன் பொண்ணாவே வாழ்துட்டோமே இப்படி ஒரு அழகான வாழ்க்கை இருக்குங்றத மதுரைக்கு வந்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன். எந்த கிராமத்துக்கு போனாலும் திருஷ்டி சுத்தி இந்த தெத்துப்பல்லுதாம்மா உனக்கு அழகுன்னு சொல்றப்போ நெகிழ்ச்சியா இருக்கு. தமிழ் சினிமால நம்பர் ஒன் ஹீரோயின். கனவு கன்னியெல்லாம் ஆக வேணாம். உங்களோட பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருந்தா போதுங்க" என்று சிரித்து வழியனுப்பிய படி அடுத்து ஷாட்டுக்கு எழுந்து போனார்.