தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மைனா அமலாபாலின் நடிப்பு பேசப்படும் அளவுக்கு இதுவரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நார்மலான நடிகையாகத்தான் நடித்து வந்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் பிருதிவிராஜூடன் அவர் நடித்த கலர் ஆப் ஸ்கை என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மனதளவில் உற்சாகமடைந்துள்ள அமலாபால், தன்னாலும் விருதுகள் வாங்கும் அளவுக்கு நடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். அதன்காரணமாக, இதுவரை கமர்சியல் கதைகளாக நடித்து வந்த அவர், இனி அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்.
குறிப்பாக பருத்தி வீரன் படத்தில் ப்ரியாமணி நடித்தது போன்ற வேடங்கள் கிடைத்தாலும் தைரியமாக நடிப்பாராம். இதுவரை சினிமாவில் ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்தும் முயற்சியில் இருந்தேன். இப்போது அதற்கான பலன் கிடைத்து விட்டது. ஆனால் அடுத்து என்னை உலகுக்கு அடையாளம் காட்டக்கூடிய கதைகளாக தேர்வு செய்யப்போகிறேன். அப்படி கிடைக்கும் படங்களில் உடல் ஊனமுற்றவராக அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிப்பேன். கதாநாயகி என்ற வட்டத்தில் இருந்து விடுபட்டு, கதை கதாபாத்திரத்திற்கேற்ப மாறி நடிக்கும் நல்ல நடிகையாக என்னை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளப்போகிறேன் என்கிறார் அமலாபால்.