'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மணிரத்னத்தின் கடல் படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் துளசி. அலைகள் ஓய்வதில்லை ராதாவின் இளைய மகளான இவர், கோ பட நாயகியான கார்த்திகாவின் தங்கை ஆவார். கடல் படத்தில் நீர்ப்பறவையில் சுனைனா நடித்தது போன்று மீனவ பெண்ணாகவே துளசியும் நடித்துள்ளார். ஆனாலும், சுனைனாவுக்கு கருப்பு மேக்கப் போட்டு மங்க வைத்தது போல் மணிரத்னம் செய்யவில்லையாம். அழகான தேவதையாட்டம் அவரை மீனவ கிராமங்களில் ஓட விட்டு படமாக்கியிருக்கிறாராம். அதனால் நல்லவேளை, முதல் படத்திலேயே எனது அழகை சிதைத்து விடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார் துளசி.
ஒருவழியாக, செண்டிமென்ட்டாக மணிரத்னம் என்ற மோதிரக்கையில் குட்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன பண்றது என்று யோசித்தபோதுதான், ரவி.கே.சந்திரன் இயக்கும் யான் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கதவை தட்டியது. பெரிய ஒளிப்பதிவாளரின் படம் என்பதால், ஜாக்பாட் அடித்த சந்தோசத்தோடு அப்படத்தில் கமிட்டானார். ஆனால் அப்படத்தின் நாயகன் ஜீவா நடித்த படங்கள் சமீபகாலமாக தோற்று வருவதால், அந்த ராசி நம்மையும தொற்றிக்கொள்ளுமே என்ற அச்சத்தில் இருக்கிறார் துளசி. கூட இருப்பவர்களும், கோ படத்தில் ஜீவாவுடன் நடித்த கார்த்திகாவை அதன்பிறகு எந்த முன்னணி ஹீரோக்களும் சீண்டவில்லை. இதே நிலைதான் உனக்கும் ஏற்படும் போல் இருக்கிறது என்றும் குத்தி விட்டுள்ளார்களாம். அதனால் வம்படியாக இநத படத்தில் வந்து மாட்டிக்கொண்டேனே என்று தாய்குலத்திடம சொல்லி கன்னத்தில் வைத்து உட்கார்ந்திருக்கிறார் துளசி.