'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
துப்பாக்கி படத்தின் வெற்றி காரணமாக தமிழ் சினிமா தன்னை டோட்டலாக தத்தெடுத்துக்கொள்ளும் என்றுதான் நினைத்திருந்தார் காஜல்அகர்வால். ஆனால் அதன்பிறகு கார்த்தி நடிக்கும் அழகுராஜா ஆல்இன்ஆல் என்ற படத்தில் மட்டுமே கமிட்டான காஜலை அதையடுத்து யாருமே சீண்டவில்லை. இருப்பினும் சில படங்களை கைப்பற்றும் முயற்சியில் திரைக்குப்பின்னால் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் காஜல். ஆனால் அப்படி அவர் பேசிக்கொண்டிருந்த வரு படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க முன்கூட்டியே பேசி வைத்திருந்தார்களாம். ஆனால் இதுதெரிந்தும், படாதிபதிகளை வற்புறுத்தி தான் அந்த படங்களில் கமிட்டாக முண்டியடித்திருக்கிறார் காஜல்.
ஆனால் இந்த விவகாரம் எப்படியோ ஹன்சிகாவின் காதுகளை எட்ட கடுப்பாகி விட்டாராம். அனுஷ்கா, அஞ்சலி போன்ற நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு தான் கஷ்டப்பட்டு பிடித்த வாய்ப்பை இவர் தட்டிப்பறிக்க முயல்வதா? என்று கொதித்துப்போனவர், தனக்கு சிபாரிசு செய்து அந்த படத்தில் தன்னை கோர்த்து விட்ட ஹீரோக்களுடன் அவசர சந்திப்பு நடத்தியிருக்கிறார். இதையடுத்து, மேற்படி ஹீரோக்கள் களமிறங்கி, ஹன்சிகா படத்தில் இல்லையென்றால், நானுமிலலை என்று அட்வான்சை தூக்கி எறிந்து விட்டார்களாம். இதனால் ஆடிப்போன படாதிபதிகள், காஜலுடனான பேச்சுவார்த்தையையே முடித்துக்கொண்டனர். ஹன்சிகா அதிரடியாக கொடுத்த இந்த கரண்ட் ஷாக், காஜலை தடுமாற வைத்துள்ளது. பாலிவுட் நடிகைகளையே திணற வைத்த என்னையே ஒரு நடிகை ஓரங்கட்டி விட்டாரா? என்று ஓவராக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். அதோடு, அடுத்து கோலிவுட்டில் ஆழக்காலூன்ற எந்த மாதிரி முயற்சி எடுக்க வேண்டும் என்று தனது சகாக்களுடன் முகாமிட்டு விவாதித்து வருகிறார் காஜல்.