பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தொடர்ந்து சர்ச்சையில் பூ நடிகை சிக்கி வருவது அவரது சுந்தரமான கணவருக்குப் பிடிக்க வில்லையாம். பெண் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்ட நிலையில் அவர் தன் ஆர்ப்பாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பூ நடிகை அரசியலில் நுழைந்ததே கணவரின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததுதானாம். திருமணத்துக்கு முன்பே ஒருவரின் செயல்பாட்டில் இன்னொருவர் தலையிடக்கூடாது என்று எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருப்பதால் கணவர் மவுனமாக இருக்கிறாராம். இதற்கிடையில் சுந்தரமான கணவருக்கும் அங்காடி தெருவில் வேலை செய்த கலகலப்பான நடிகைக்கும் நெருக்கம் அதிகம் என்ற செய்தி வந்தபோது கடுமையாக கத்தினாராம் பூ நடிகை. இப்படியாக பூவும், பூவுக்கு பூவை சூடியவரும் விரிசல்களால் பிரிந்து நிற்கிறார்களாம். விஷயம் எப்போது வெளியில் வரும் என்றுதான் தெரியவில்லை.