ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தொடர்ந்து சர்ச்சையில் பூ நடிகை சிக்கி வருவது அவரது சுந்தரமான கணவருக்குப் பிடிக்க வில்லையாம். பெண் குழந்தைகள் பெரியவர்களாகிவிட்ட நிலையில் அவர் தன் ஆர்ப்பாட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பூ நடிகை அரசியலில் நுழைந்ததே கணவரின் விருப்பத்துக்கு மாறாக நடந்ததுதானாம். திருமணத்துக்கு முன்பே ஒருவரின் செயல்பாட்டில் இன்னொருவர் தலையிடக்கூடாது என்று எழுதப்படாத ஒப்பந்தம் போட்டிருப்பதால் கணவர் மவுனமாக இருக்கிறாராம். இதற்கிடையில் சுந்தரமான கணவருக்கும் அங்காடி தெருவில் வேலை செய்த கலகலப்பான நடிகைக்கும் நெருக்கம் அதிகம் என்ற செய்தி வந்தபோது கடுமையாக கத்தினாராம் பூ நடிகை. இப்படியாக பூவும், பூவுக்கு பூவை சூடியவரும் விரிசல்களால் பிரிந்து நிற்கிறார்களாம். விஷயம் எப்போது வெளியில் வரும் என்றுதான் தெரியவில்லை.