தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேவயானியின் கணவர் ராஜகுமாரன். சினிமாவை விட்டு விலகி தேவயானியின் குடும்பத்தை கவனித்து வரும் ராஜகுமாரன் மீண்டும் இயக்குனராக ஆசைப்பட்டு அவரது மனைவி தேவயானியே ஹீரோயினாக நடிக்க திருமதி.தமிழ் என்ற படத்தை ஆரம்பித்தார். தயாரிப்பாளர் தேவயானிதான். பொருளாதார சிக்கல் காரணமாக பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தப் படத்தை பொங்கலுக்கு எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ராஜகுமாரன். ஆனால் தேவயானி இதில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கிறாராம். படம் இக்காலத்துக்கு ஏற்ற வகையில் இல்லை. மேலும் பணம் செலவு செய்து படத்தை வெளியிட்டாலும் போட்ட பணம் வருமா என்பதுதான் அவரது கவலையாம். அதனால் இதுவரை செலவு செய்த பணம் திருப்பி கிடைக்கும் வகையில் யாராவது வாங்கிக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறாராம். இதனால் படம் வாங்கி வெளியிடும் நிறுவனங்களிடம் தேவயானி பேசி வருவதாகச் சொல்கிறார்கள். எப்படியோ கணவருக்காக கஷ்டப்படும் நடிகைகள் பட்டியலில் தேவயானியும் சேர்ந்து விட்டார்.