வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தங்கமகன். ஏற்கனவே ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் போன்ற படங்களில் நடித்த நாசரும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றபோது அதற்கு நாசர் ஆஜராகவில்லையாம். அவர் வெளியூரில் இருந்ததால் அவரது மனைவி கமீலா பூஜைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரைப்பார்த்ததும் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சிக்கு சங்கடமாகி விட்டதாம்.
காரணம், இரண்டாக உடைந்திருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சி கோஷ்டிக்கு எதிர் கோஷ்டியில் இடம்பெற்றிருக்கிறர் கமீலா. எஸ்.ஏ.சிக்கு எதிராக எழுப்பப்பட்ட பல கோஷங்களில் இவரும் கலந்து கொண்டவர். அதனால் இருவரும் அந்த பூஜையில் பேசிக்கொள்ளவில்லையாம். அதேசமயம், அடுத்த நாளே டைரக்டர் ஏ.எல்.விஜய், நாசருக்கு போன் போட்டு, இந்த படத்தில் நீங்கள் இல்லை. அடுத்த படத்தில் கண்டிப்பாக நாம் இணைவோம் என்று சொல்லிவிட்டு காரணம் சொல்லாமலேயே போனை கட் பண்ணி விட்டாராம். உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொண்ட நாசரும், மறுபேச்சு இல்லாமல் ஓ.கே தேங்கஸ் என்று கெளரவமாக சொல்லிக்கொண்டு விலகிவிட்டாராம்.