இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பல்வேறு வழக்குகளில் சிக்கி இப்போது சிறையில் இருக்கும் பூனைக்கண் நடிகை. கடும் கோபத்தில் இருக்கிறாராம். தான் சார்ந்திருக்கும் சினிமா உலகம், தான் சார்ந்திருக்கும் கட்சி, ஜாதி அமைப்பு எதுவும் தன்னை காப்பாற்ற முன்வராத கோபத்தில் இருக்கிறார். காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை. இதனால் சிறையிலிருந்து வெளியே வந்ததும். தன்னை பயன்படுத்திக் கொண்ட அத்தனை பேரின் முகத்திரையையும் கிழிக்கப்போகிறேன் என்று சவால் விட்டிருக்கிறாராம். பூனைக் கண் நடிகை தன்னைப் பற்றி வாய் திறக்காமல் இருக்க எவ்வளவு வேண்டும் என்று சில பிரமுகங்கள் பேரம் பேசி வருகிறார்களாம். இப்படி வரும் தொகையைக் கொண்டு கடன்களை அடைத்து விட்டு வழக்கிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாம். இந்த திட்டம் வெற்றிபெறாவிட்டால் கடைசி வரை போராடிப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம்.