விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
சமீபத்தில் ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன் "எனக்கு இரண்டு முறை தேசிய விருது கிடைக்க வேண்டியது. கடைசி நேரத்தில் சிலரின் லாபிகளால் கிடைக்காமல் போனது. முதல் நாள் இரவு விருது உனக்குத்தான் என்று டெல்லியில் இருந்து போன் வரும் மறுநாள் அறிவிப்பில் இன்னொருவர் பெயர் இருக்கும். இந்த சதியை செய்பவர் யார் என்பதும் எனக்குத் தெரியும்" என்று பேசினார். இது பாடலாசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில பாடலாசிரியர்கள் சினேகனுக்கு போன்போட்டு பாராட்டினார்களாம். சிலர் போட்டு வாங்கினார்களாம். ஒரு பெரிய கவிஞர் நள்ளிரவில் போன்போட்டு "நீ என்னை குறிப்பிட்டுத்தான் பேசியிருக்கேன்னு தெரியும். தேசிய விருதுன்னா சும்மான்னு நினைச்சியா? வெறும் திறமை இருந்தா மட்டும் போதாது. விருதை வாங்க புத்தியையும் கொஞ்சம் பணத்தையும் செலவு பண்ணனும் தம்பி" என்று சொன்னாராம்.