தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் கொடி நாட்டி விட்டு கோடம்பாக்கத்துக்குள் என்ட்ரி ஆனவர் பிந்து மாதவி. தெலுங்கில் அதிரடி நாயகியாக வேண்டும் என்று களமிறங்கினார் இவர். ஆனால் அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்கும்படியான படங்கள் அமையவில்லையாம். அதனால் கோடம்பாக்கம் தன்னை தத்தெடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறார் பிந்து. ஆனால் இங்கே வந்து பார்த்தால் இவர்களுக்கு ஆந்திராவாலாக்கள் எவ்வளவோ மேல் என்றாகி விட்டதாம்.அந்த அளவுக்கு படுகவர்ச்சியான உடையணிந்து நடிக்கிறேன் என்று இவரே முன்வந்தாலும், அதெல்லாம் வேண்டாம். கதை கெட்டுப்போய் விடும் என்று குடும்பப் பாங்கான காஸ்டியூம்களை கொடுத்து அணிந்து வர சொல்கிறார்களாம்.
இப்படி சொல்லும் பிந்துமாதவியிடம், நல்ல விசயம்தானே. இப்படியே நடித்து நல்ல நடிகை என்கிற இமேஜை மெயின்டெயின் பண்ண வேண்டியதானே என்று சொன்னால், இன்றைய காலகட்டத்தில் மூடி மறைத்து நடிப்பவர்களுக்கு மரியாதை இல்லை. டூ-பீஸ் ரேஞ்சுக்கு உடையணிந்து நடித்தால்தான் பெரிய அளவில் ரீச் ஆக முடிகிறது. அதோடு இந்தியா முழுக்க பிரபலமாகலாம். அதனால்தான் அதிரடி கவர்ச்சி நாயகியாக ஆசைப்படுகிறேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் அந்த மாதிரி நடிகைகளை தோலுரிக்கும் அசைவ இயக்குனர்கள் எனக்கு யாரும் சிக்கவில்லை. அசைவத்தைக்கண்டாலே தூரத்துக்கு அப்பால் ஓடும் சைவப்பிராணிகளே சிக்குகிறார்கள். என்னதான் செய்வது என்று புலம்புகிறார் பிந்து மாதவி.