லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோயின் அஞ்சலிதான். என்ன கதை, யார் ஹீரோ என்ற எந்த கேள்வியும் கிடையாது. எத்தனை நாள் ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் இதுதான் கேள்வி. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அஞ்சலியின் தாய்குலம் போடும் ஒரே கண்டிஷன் சம்பளத்தை ரொக்கமாக முதலிலேயே தரவேண்டும் என்பதுதான். அரைக்கோடியை தாண்டித்தான் இப்போது சம்பளம் கேட்கிறார் தாய்குலம். இதுதவிர அம்மாவும் மகளும் கொடுக்கிற டார்ச்சர்களும் தாங்கவில்லையாம். சேட்டை படத்தின் படப்பிடிப்பின்போது ஹன்சிகா 30 நிமிடத்தில் மேக்போட்டு தயாரானால், அஞ்சலி மேக்அப் போட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்வாராம். படப்பிடிப்புக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது தாமதமாக வருவாராம். தன்னுடன் ஒரு உதவியாளர் படையையே அழைத்து வருகிறாராம். அவர்கள் அனைவரும் அவரது ஆந்திரா கிராமத்து பண்ணை ஆட்களாம். உதவியாளர்கள் என்ற போர்வையில் பாதுகாவலர்களாக வைத்திருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் அம்மாவும் மகளும் "குடிக்க" உயர்ரக ஜூஸ் கொடுக்க வேண்டுமாம். வளர்ற பொண்ணுக்கு இதெல்லாம் அழகா என்று கேட்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சில துணை நடிகைகள்.