ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோயின் அஞ்சலிதான். என்ன கதை, யார் ஹீரோ என்ற எந்த கேள்வியும் கிடையாது. எத்தனை நாள் ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் இதுதான் கேள்வி. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அஞ்சலியின் தாய்குலம் போடும் ஒரே கண்டிஷன் சம்பளத்தை ரொக்கமாக முதலிலேயே தரவேண்டும் என்பதுதான். அரைக்கோடியை தாண்டித்தான் இப்போது சம்பளம் கேட்கிறார் தாய்குலம். இதுதவிர அம்மாவும் மகளும் கொடுக்கிற டார்ச்சர்களும் தாங்கவில்லையாம். சேட்டை படத்தின் படப்பிடிப்பின்போது ஹன்சிகா 30 நிமிடத்தில் மேக்போட்டு தயாரானால், அஞ்சலி மேக்அப் போட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்வாராம். படப்பிடிப்புக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது தாமதமாக வருவாராம். தன்னுடன் ஒரு உதவியாளர் படையையே அழைத்து வருகிறாராம். அவர்கள் அனைவரும் அவரது ஆந்திரா கிராமத்து பண்ணை ஆட்களாம். உதவியாளர்கள் என்ற போர்வையில் பாதுகாவலர்களாக வைத்திருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் அம்மாவும் மகளும் "குடிக்க" உயர்ரக ஜூஸ் கொடுக்க வேண்டுமாம். வளர்ற பொண்ணுக்கு இதெல்லாம் அழகா என்று கேட்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சில துணை நடிகைகள்.