கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோயின் அஞ்சலிதான். என்ன கதை, யார் ஹீரோ என்ற எந்த கேள்வியும் கிடையாது. எத்தனை நாள் ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் இதுதான் கேள்வி. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அஞ்சலியின் தாய்குலம் போடும் ஒரே கண்டிஷன் சம்பளத்தை ரொக்கமாக முதலிலேயே தரவேண்டும் என்பதுதான். அரைக்கோடியை தாண்டித்தான் இப்போது சம்பளம் கேட்கிறார் தாய்குலம். இதுதவிர அம்மாவும் மகளும் கொடுக்கிற டார்ச்சர்களும் தாங்கவில்லையாம். சேட்டை படத்தின் படப்பிடிப்பின்போது ஹன்சிகா 30 நிமிடத்தில் மேக்போட்டு தயாரானால், அஞ்சலி மேக்அப் போட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்வாராம். படப்பிடிப்புக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது தாமதமாக வருவாராம். தன்னுடன் ஒரு உதவியாளர் படையையே அழைத்து வருகிறாராம். அவர்கள் அனைவரும் அவரது ஆந்திரா கிராமத்து பண்ணை ஆட்களாம். உதவியாளர்கள் என்ற போர்வையில் பாதுகாவலர்களாக வைத்திருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் அம்மாவும் மகளும் "குடிக்க" உயர்ரக ஜூஸ் கொடுக்க வேண்டுமாம். வளர்ற பொண்ணுக்கு இதெல்லாம் அழகா என்று கேட்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சில துணை நடிகைகள்.