சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோயின் அஞ்சலிதான். என்ன கதை, யார் ஹீரோ என்ற எந்த கேள்வியும் கிடையாது. எத்தனை நாள் ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் இதுதான் கேள்வி. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அஞ்சலியின் தாய்குலம் போடும் ஒரே கண்டிஷன் சம்பளத்தை ரொக்கமாக முதலிலேயே தரவேண்டும் என்பதுதான். அரைக்கோடியை தாண்டித்தான் இப்போது சம்பளம் கேட்கிறார் தாய்குலம். இதுதவிர அம்மாவும் மகளும் கொடுக்கிற டார்ச்சர்களும் தாங்கவில்லையாம். சேட்டை படத்தின் படப்பிடிப்பின்போது ஹன்சிகா 30 நிமிடத்தில் மேக்போட்டு தயாரானால், அஞ்சலி மேக்அப் போட இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்வாராம். படப்பிடிப்புக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது தாமதமாக வருவாராம். தன்னுடன் ஒரு உதவியாளர் படையையே அழைத்து வருகிறாராம். அவர்கள் அனைவரும் அவரது ஆந்திரா கிராமத்து பண்ணை ஆட்களாம். உதவியாளர்கள் என்ற போர்வையில் பாதுகாவலர்களாக வைத்திருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் அம்மாவும் மகளும் "குடிக்க" உயர்ரக ஜூஸ் கொடுக்க வேண்டுமாம். வளர்ற பொண்ணுக்கு இதெல்லாம் அழகா என்று கேட்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சில துணை நடிகைகள்.