ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
நயன்தாராவும், ஆர்யாவும் மிக நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் கொழுந்துவிட்டு எரிகிறது என்று தமிழ்நாட்டு மீடியாக்கக்ள கிசு கிசு எழுதிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆந்திரா மீடியாக்களின் பார்வையே வேறு. நயன்தாராவும், ராணாவும்தான் இப்போ நெருக்கம் என்று அவர்கள் கிசுகிசு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷாவின் எதிர்ப்பையும் மீறி நயன்தாராவுடன் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறார் ராணா. படத்தின் கதையும் கிட்டத்தட்ட நயன்தாராவின் கதைமாதிரியாம். திருமணமான ஒவருவரை காதலித்து, அவர் உன் காதலை விட என் குடும்பம்தான் பெருசு என்று முடிவெடுக்க காதலி உண்மையான காதலைத் தேடிச் செல்வது மாதிரியான கதையாம். இப்போது ராணாவும், நயன்தாராவும் நெருக்கமாகி இருப்பது த்ரிஷாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷாவும், நயன்தாராவும் விருது மேடையில் கட்டிப்பிடி வைத்தியம் செய்து நட்பை புதுப்பித்துக் கொண்டார்கள். இப்போது அதில் மீண்டும் விரிசல் விழுந்து விட்டது. நயன்தாரா யாருடன் நெருக்கமாக இருந்தாலும் சீக்கிரமே அவர்கள் நயன்தாராவின் விழி அசைவுக்குள் அடங்கிப்போய்விடுவார்கள் அப்படி ஒரு சக்தி நயன்தாராவுக்கு உண்டு என்பதால்தான் த்ரிஷாவுக்கு கலக்கம். எப்படியோ நயன்தாராவின் அடுத்த எபிசோட் ஆரம்பமாகிவிட்டது.