டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சாய்மீரா நிறுவனம் தமிழ் சினிமாவை புரட்டிப்போட வந்த கார்பரேட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால வளர்ச்சி சினிமாக்காரர்களையே வியக்க வைத்தது. அந்த நிறுவன அதிகாரிகள் ஆளாளுக்கு நாட்டாமை செய்து அந்த நிறுவனத்தையே காலி பண்ணினார்கள். சிலர் நிறுவனம் திவாலாக போகிறது என்பதை அறிந்து பாதியிலேயே தங்கள் பங்கை வாங்கிக் கொண்டு ஓடினார்கள். அந்த நிறுவனம் நல்ல நிலையில் இருந்தபோது நலிந்த தயாரிப்பாளர்களுக்கென பத்து திரைப்படங்களை தயாரிக்க முன்வந்தது. இதற்காக முதல் கட்டமாக பத்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகையை கொடுத்தது. இதில் வானம் பார்த்த சீமை, ஏன் இப்படி மயக்கினாய் என்ற இரண்டு படங்கள்தான் தயாரிக்கப்பட்டது. அதுவும் வெளிவரவில்லை. மற்ற 8 தயாரிப்பாளர்களும் படத்துக்கு பூஜை கூட போடாமல் கொடுத்த பணத்தை சுவாகா பண்ணிவிட்டார்கள். தற்போது கடும் பண நெருக்கடியில் இருக்கும் அந்த நிறுவனம் கொடுத்த பணத்தில் பாதியையாவது வாங்க முடியுமா? என்று முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல சினிமா முன்னணியினரைப் பார்த்து சார்பாக சிலர் பேசி வருகிறார்களாம். முதலை வாயிற்குள் சென்றதை திரும்ப பெற முடியுமா என்கிறார்கள், விபரம் தெரிந்தவர்கள்.