டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாய் ஆர்யா எந்த நடிகையுடன் பேசினாலும், அவர்களை அவருடன் இணைத்து விதவிதமான கிசுகிசுக்கள் பரவி விடுகிறது. தன்னைப்பற்றி எந்த மாதிரியான செய்திகள் வெளியானாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை ஆர்யா. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதைப்பற்றி ரொம்பவே கவலைப்படுகிறார்கள். இதனால் மற்ற ஹீரோக்கள் தங்களுடன் இணைந்து நடிக்க தவிர்ப்பார்கள் என்று அச்சப்படுகிறார்கள். அதன்காரணமாக, மீண்டும் மீண்டும் ஆர்யா தங்களை தேடி வந்தால், அவரிடம் முகம் கொடுத்து பேசுவதை தவிர்க்கிறார்கள்.
அதில், நயன்தாரா முக்கியமானவராக இருக்கிறார். தற்போது ராஜா ராணி படத்தில் அவருடன் நடித்தபோதும், முன்பு மாதிரி கிளுகிளுப்பாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பதை தவிர்த்து வருகிறார். அதேபோல் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுடன் இணைந்திருக்கும் அனுஷ்காவும், அவருடன் இணைத்து கிசுகிசுக்கள் பரவியதை அடுத்து நெருக்கத்தை குறைத்திருக்கிறார். இதனால் எப்போதும ஸ்பாட்டில் கலகலப்பாக காணப்படும் ஆர்யா பேய் அறைஞ்சது போல் இருக்கிறாராம். அதோடு, எல்லாரும் நடிகைங்களை ஆர்யா பிக்கப் பண்ணிக்கிட்டே இருக்கிறதா சொல்றாங்க. ஆனா வெளியிலதான் நான் ஹீரோ, உள்ளுக்குள்ள ஜீரோங்கிறது யாருக்காவது தெரியுமா? என்று புலம்புகிறாராம்