'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு வார இதழில் வந்த பேட்டிக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் அந்த கவர்ச்சி நடிகை மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது வியாபார நிறுவனங்கள் முடங்கி விட்டன. கமிஷனர் ஆபீசுக்கும், கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். வாடகை வீட்டுக்காரர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். கடைக்கு இடம் கொடுத்தவர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். பணியாளர்கள் வேலைவிட்டு நின்று விட்டார்கள். தங்கை மகளை படித்த பள்ளியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்கிறார்கள். அம்மாவும், தங்கையும் பேசி பல நாட்களாச்சு. இதெல்லாம்கூட நடிகைக்கு பெரிய வருத்தம் இல்லை. இதுநாள் வரை தன்னைச் சுற்றி இருந்து நண்பர்கள் கூட்டம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கூட உதவ யாரும் முன்வரவில்லை. குறைந்த பட்சம் ஆறுதல் சொல்லக்கூட யாரும் முன்வரவில்லை. "இப்போதுதான் நண்பர்களை புரிந்து கொண்டிருக்கிறேன். இனி எனக்கு நண்பர்களே வேண்டாம். நானே தனியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். நிஜத்தில் நான்தான் டிஷ்யூ பேப்பர் ஆகியிருக்கிறேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் நடிகை.