ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஒரு வார இதழில் வந்த பேட்டிக்காக பல்வேறு தரப்பிலிருந்தும் அந்த கவர்ச்சி நடிகை மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது வியாபார நிறுவனங்கள் முடங்கி விட்டன. கமிஷனர் ஆபீசுக்கும், கோர்ட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். வாடகை வீட்டுக்காரர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். கடைக்கு இடம் கொடுத்தவர்கள் காலி பண்ணச் சொல்கிறார்கள். பணியாளர்கள் வேலைவிட்டு நின்று விட்டார்கள். தங்கை மகளை படித்த பள்ளியிலிருந்து விலகிக் கொள்ளச் சொல்கிறார்கள். அம்மாவும், தங்கையும் பேசி பல நாட்களாச்சு. இதெல்லாம்கூட நடிகைக்கு பெரிய வருத்தம் இல்லை. இதுநாள் வரை தன்னைச் சுற்றி இருந்து நண்பர்கள் கூட்டம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கூட உதவ யாரும் முன்வரவில்லை. குறைந்த பட்சம் ஆறுதல் சொல்லக்கூட யாரும் முன்வரவில்லை. "இப்போதுதான் நண்பர்களை புரிந்து கொண்டிருக்கிறேன். இனி எனக்கு நண்பர்களே வேண்டாம். நானே தனியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். நிஜத்தில் நான்தான் டிஷ்யூ பேப்பர் ஆகியிருக்கிறேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் நடிகை.